கலை பண்பாட்டுத்துறை தமிழிசை மூவர் விழா

கரூர்: கரூர் நாரதகான சபாவில் கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் அருணாச்சல கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரை கவுரவித்து தமிழிசை மூவர் விழா நடந்தது.கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி, கலை பண்பாட்டுத்துறை கமிஷனர் மணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.கரூர் மாவட்ட கலைமன்றம் சார்பில் 2008-09 மற்றும் 2009-10 ஆகிய இரு ஆண்டுக்களுக்கான "கலை இளமணி' விருது அபிமித்ரா (பரதநாட்டியம்), ஸ்வேதாசரண் (பரதநாட்டியம்), "கலைவளர்மணி' விருது அதிஷ்டபாலன் (பரதநாட்டியம்), பாண்டியம்மாள் (ஓவியம்), "கலைச்சுடர்மணி' விருது சின்னதுரை (ஒயிலாட்டம்), அகிலாதேவி (பரதநாட்டிய ஆசிரியர்), "கலைநன்மணி' விருது ஞானசேகரன் (நாடகம்), ஜெகநாதன் (இசை நாடக நடிகர்), "கலைமுதுமணி' விருது மருதமுத்து (நாதசுரம்), சந்தானம் (கிளாரிநெட்) ஆகிய பத்து பேருக்கு வழங்கப்பட்டது.


கலெக்டர் உமாமகேஸ்வரி பேசியதாவது: இந்த விழா தமிழிசை மூவர்களான அருணாச்சல கவியராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் விழா. தமிழக பாரம்பரியம், கலாச்சாரம், தமிழிசையோடு கலந்துள்ளது. இந்த தமிழிசை வளர்ப்பதற்கு அடித்தளமாக இருந்த மூவருக்கும் விழா எடுத்து சிறப்பிக்கப்படுகிறது.



இன்றைய தலைமுறையினர் தமிழிசை மூவரை அறிந்து கொள்வதற்காகவும், அதன்மூலம் பல்வேறு கலைஞர்களின் தமிழிசை நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் இந்த விழா இரண்டு நாள் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகளிடையே இந்த கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களது திறமைகள் வெளிக்கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலைவிருது பெற்றுள்ள பெரியோர், இளைஞர், குழந்தைகள் மேலும் தங்களது கலைக்கு புகழ் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கலைபண்பாட்டுத்துறை கமிஷனர் மணி பேசுகையில்,"" தமிழிசை மூவருக்கும் விழா எடுக்கும் இவ்வேளையில், அவர்கள் விட்டுச்சென்ற இசையை இளைய தலைமுறையினர் காக்க வேண்டும். அரசு நலிந்த கலைஞர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. மேலும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு தனிவாரியம் அமைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறது. தமிழிசையை வளர்க்க அரசு பெருமுயற்சி எடுத்து வருகிறது,'' என்றார்.


கிருஷ்ணராயபுரம் எம்.எல். ஏ., காமராஜ், திருச்சி ம ண்டல கலை பண்பாட்டு மை ய உதவி இயக்குனர் குணசேகரன் வாழ் த்தி பேசினர். கரூர் அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் தேவிகாபூரணி நன்றி கூறினார்.முன்னதாக, கரூர் அரசு இசை ப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை நடந்தது. தொடர்ந்து தருமபுரம் ஞானபிரகாசம் மற்றும் குடந்தை வேதகீதாலட்சுமணன் குழுவினரின் தேவார இசையும், ஸ்ரீநிதி குழுவினரின் வீணை இசை, காஷ்யப் மகேஷ் குழுவினரின் தமிழிசை, ஷேக்மெகபூப், சுபானி, காலீசாபீ சுபானி சிறப்பு நாதஸ்வரம், கோவிலூர் கல்யாணசுந்தரம், தாராபுரம் விக்னேஷ் சிறப்பு தவில் நிகழ்ச்சி நடந்தது.

 

0 comments: