"இல்லம் தேடி நூலகம்'திட்டம் கோத்தகிரியில் துவக்கம்

கோத்தகிரி: கோத்தகிரி கிளை நூலகத்தில் இல்லம் நோக்கி நூலகம் திட்டம் துவக்க விழா நடத்தப்பட்டது.பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கோத்தகிரி நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்த நூலக வாசகர் வட்டம் சார்பில், "இல்லம் நோக்கி நூலகம்' என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது.நூலக பணியாளர்கள் மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் பொதுமக்களுடைய வீடுகளை தேடி சென்று அவர்களை நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்க உள்ளனர். இதன்மூலம் வீட்டில் இருந்துகொண்டே நூலகத்தில் உறுப்பினர்களாகும் வாய்ப்பு பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது.ஒரு மாதம் முழுவதும் உறுப்பினர் சேர்ப்பு தீவிரமாக நடக்கிறது. கோத்தகிரி "ஹோப் பார்க்' பகுதியில் உள்ள வீடுகளில் இத்திட்டத்தின் துவக்க விழா நடந்தது.நூலக புரவலர் சாந்தராஜ் வரவேற்றார். புரவலர் ராஜன் தலைமை வகித்தார். தி.மு.க., கோத்தகிரி ஒன்றிய செயலர் புரவலவர் வீரபத்திரன், ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜூ, புரவலர் கவுரிவரதராஜன், நூலகர் ரவி மற்றும் கவுன்சிலர் மாயவசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். வாசகர் வட்ட உறுப்பினர் பிரபு நன்றி கூறினார்.

 

0 comments: